பதிவு செய்த நாள்
20 நவ2014
10:17
இந்தியாவில், 25 ஆண்டுகளுக்கு முன், அம்பாசிடர் மற்றும் பிரிமியர் பத்மினி மாடல் கார்கள் தான் பிரபலமாக இருந்தன. அதிலும், வெள்ளை நிற அம்பாசிடர் கார் என்பது, கவுரவ சின்னமாக கருத்தப்பட்ட காலம் அது. ஆனால், மாருதி சுசூகி நிறுவனம், மாருதி 800 காரை அறிமுகப்படுத்திய பிறகு, அனைத்தும் தலைகீழாக மாறி விட்டது. அடுத்தடுத்த ஆண்டுகளில், வெளிநாட்டு கார் நிறுவனங்கள், இந்தியாவில், படையெடுக்க துவங்கின.
தற்போது, இந்தியாவில் கார்களின் எண்ணிக்கை பெருகி விட்டது. இந்த சூழ்நிலையில், இந்திய மக்கள், எந்த வண்ணம் மீது மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர் என்பது குறித்து, கடந்த ஆண்டு விற்பனையான கார்களை அடிப்படையாக வைத்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில் கிடைத்த தகவல்கள் வருமாறு:
இந்திய மக்கள் வண்ணங்கள் மீது ஆர்வம் கொண்டவர்கள். பளிச்சென இருப்பது தான் அவர்களுக்கு பிடிக்கும் என்ற பொதுவான எண்ணம் இருந்தாலும், கார்கள் விஷயத்தில், இது எடுபடவில்லை. பெரும்பான்மையான மக்கள், வெள்ளை நிற காரை தான் விரும்புகின்றனர்.
* இரண்டு கார்கள் விற்பனையானால், அதில் ஒரு காரின் நிறம் ெவள்ளையாகவே இருக்கிறது.
* பராமரிப்புக்கு எளிது; மறு விற்பனையின் போது, நல்ல விலை கிடைக்கும்; கறுப்பு உள்ளிட்ட அடர்த்தியான வண்ணங்களை கொண்ட கார்கள், சூரிய வெப்பத்தை உள்ளிழுக்கும் பிரச்னை கொண்டது உள்ளிட்ட பல காரணங்களால், வெள்ளை நிற கார்கள் மீது மக்கள் ஆர்வமாக உள்ளனர்.
* 2013ல் விற்பனையான மொத்த கார்களில், 7 சதவீத கார்கள் கறுப்பு நிற கார்கள் தான்; 11 சதவீத கார்கள் சிவப்பு நிற கார்கள்.
* வட மாநிலங்களில் விற்பனையான மொத்த கார்களில், 66 சதவீதம், வெள்ளை நிறம் தான்.
* தென் மாநிலங்களில் விற்பனையான மொத்த கார்களில், 34 சதவீதம் மட்டுமே வெள்ளை நிறம்.
* சொகுசு கார்கள் விற்பனையில், 61 சதவீதம் வெள்ளை நிறம்; 12 சதவீத கார்கள் கறுப்பு.
இவ்வாறு, ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|