பதிவு செய்த நாள்
21 நவ2014
17:16
மும்பை : இந்திய பங்குசந்தையில் சென்செக்ஸ்-நிப்டி புதிய உச்சத்தை தொட்டது. உலகளவில் பங்குசந்தைகளில் காணப்படும் ஏற்றம், மஹிந்திரா மற்றும் ஐஎன்ஜி வைசியா நிறுவனங்கள் இணைந்து வங்கியாக செயல்பட இருப்பதாக அறிவித்துள்ளது, அதன்காரணமாக அந்நிறுவன பங்குகள் உயர்ந்ததால் இந்திய பங்குசந்தைகள் ஏற்றம் பெற்றன. மேலும் ஆட்டோ, எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்பான பங்குகளும் உயர்ந்தன.
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான குறியீட்டு எண் சென்செக்ஸ் 267.07 புள்ளிகள் உயர்ந்து 28,334.63-ஆகவும், தேசிய பங்குசந்தையான குறியீட்டு எண் நிப்டி 75.45 புள்ளிகள் உயர்ந்து 8,477.35-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் அநேக நிறுவன பங்குகள் ஏற்றத்தில் முடிந்தன. குறிப்பாக கோட்டாக் மஹிந்திரா வங்கி 3.68 சதவீதமும், ஐஎன்ஜி வைசியா பங்கு 2 சதவீதமும் உயர்ந்தன. இவை தவிர்த்து ஆக்சிஸ், எஸ்பிஐ., எச்டிஎப்சி., ஐசிஐசி., எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்பான பங்குகள் உள்ளிட்ட நிறுவன பங்குகளும் உயர்வுடன் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|