பதிவு செய்த நாள்
28 நவ2014
17:27
மும்பை : இந்திய பங்குசந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்வுடன் முடிந்தன. குறிப்பாக சென்செக்ஸ் 255 புள்ளிகள் உயர்ந்தும், நிப்டி 94 புள்ளிகள் உயர்ந்தும் புதிய உச்சத்தை தொட்டன. ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பாலும், கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் அந்த துறை பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவு வாங்கியதாலும் இந்திய பங்குசந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான குறியீட்டு எண் சென்செக்ஸ் 255.08 புள்ளிகள் உயர்ந்து 28,693.99-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 94.05 புள்ளிகள் உயர்ந்து 8,588.25-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் அநேக நிறுவன பங்குகள் உயர்வுடன் முடிந்தன. குறிப்பாக டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, மாருதி சுசூகி, கோல் இந்தியா, எல்அண்ட்டி., ஹீரோ மோட்டோ கார்ப், என்டிபிசி., ஹிண்டால்கோ, எச்டிஎப்சி., விப்ரோ, ஐடிசி., டாடா பவர், ரிலையன்ஸ் உள்ளிட்ட அநேக பங்குகள் உயர்வுடன் முடிந்தன. இவை தவிர்த்து ஆக்சிஸ், எச்டிஎப்சி., ஐசிஐசிஐ., எஸ்பிஐ. போன்ற பங்குகளும் உயர்வுடன் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|