பதிவு செய்த நாள்
16 டிச2014
01:23
புதுடில்லி:உணவுப் பொருட்களின் விலை சரிவால், மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையிலான நாட்டின் பணவீக்கம், கடந்த நவம்பரில் பூஜ்யமாக குறைந்துள்ளது. இது, அக்டோபரில், 1.77 சதவீதமாக இருந்தது.கடந்த ஐந்தரை ஆண்டுகளில், இந்த அளவிற்கு பணவீக்கம் குறைந்துள்ளது, இதுவே முதன்முறையாகும்.கடந்த 2009ம் ஆண்டு ஜூலையில், மொத்த விலை பணவீக்கம், மைனஸ் 0.3 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த ஆண்டு நவம்பரில், பணவீக்கம், 7.52 சதவீதமாக உயர்ந்து காணப்பட்டது.மதிப்பீட்டு மாதத்தில், உணவுப் பணவீக்கம், மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 0.63 சதவீதமாக குறைந்துள்ளது. எரிபொருள் மற்றும் மின்சக்தி பணவீக்கம், 2009ம் ஆண்டுக்கு பின், 4.91 சதவீதமாக சரிவடைந்து உள்ளது.அதே சமயம், தயாரிப்புத் துறை பணவீக்கம், 2.04 சதவீதமாக உயர்ந்துள்ளது.நவம்பரில், மொத்தம் மற்றும் சில்லரை விலை பணவீக்கமும், அக்டோபரில், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சியும் குறைந்துள்ளது.இவற்றை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி, குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|