பதிவு செய்த நாள்
18 டிச2014
10:35
மும்பை : கடந்த ஐந்து நாட்களாக பங்குசந்தைகள் சரிந்திருந்த நிலையில் இன்று(டிச.,18ம் தேதி) அதிக ஏற்றத்துடன் துவங்கின. இன்றைய வர்த்தகநேர துக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 395.67 புள்ளிகள் உயர்ந்து மீண்டும் 27,000 புள்ளிகளை கடந்து 27,105.80 புள்ளிகளிலும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 121.70 புள்ளிகள் உயர்ந்து 8,100 புள்ளிகளை கடந்து 8,151.50 புள்ளிகளிலும் வர்த்தகமாகின.
அமெரிக்க பெடரல் வங்கி, வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யாதது, உலகளவில் பங்குசந்தைகளில் காணப்படும் முன்னேற்றம் போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகளும் உயர்வுடன் காணப்படுகின்றன.
இந்திய பங்குசந்தைகள் தவிர்த்து ஆசியாவின் இதர பங்குசந்தைகளான ஹாங்காங்கின ஹேங்சேங் 1.06 சதவீதமும், ஜப்பானின் நிக்கி 2.55 சதவீதமும் உயர்ந்து இருந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|