பதிவு செய்த நாள்
18 டிச2014
17:29
மும்பை : கடந்த ஐந்து நாள் சரிவுக்கு பின்னர் இந்திய பங்குசந்தைகள் நன்கு எழுச்சி கண்டன. சென்செக்ஸ் மீண்டும் 27 ஆயிரம் புள்ளிகளையும், நிப்டி 8100 புள்ளிகளையும் தாண்டிது.
அமெரிக்க பெடரல் வங்கி, வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யாதது, அதன்விளைவாக உலகளவில் பங்குசந்தைகளில் காணப்பட்ட முன்னனேற்றம், ரூபாயின் மதிப்பு சரிவிலிருந்து மீண்டது மற்றும் சரக்கு மற்றும் சேவை வரிக்கு மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளித்தது போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகள் இன்று அதிக எழுச்சி கண்டன.
இதனால் வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான குறியீட்டு எண் சென்செக்ஸ் 416.44 புள்ளிகள் உயர்ந்து மீண்டும் 27 ஆயிரம் புள்ளிகளை தாண்டி 27,126.57–ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 129.50 புள்ளிகள் உயர்ந்து மீண்டும் 8100 புள்ளிகளை கடந்து 8,159.30–ஆக முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 27 நிறுவன பங்குகள் உயர்வுடன் முடிந்தன. குறிப்பாக இன்றைய வர்த்தகத்தில், பெல், ஹிண்டால்கோ, கெயில், ஐசிஐசிஐ., மாருதி சுசூகி, சிப்லா, என்டிபிசி., டாடா பவர், ஆக்சிஸ் வங்கி, எல்அண்ட்டி., டாடா ஸ்டீல், பஜாஜ் ஆட்டோ, டாடா மோட்டார்ஸ், எஸ்பிஐ., உள்ளிட்ட நிறுவன பங்குகள் அதிக ஏற்றத்துடன் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|