பதிவு செய்த நாள்
19 ஜன2015
16:42
புதுடில்லி:'ஏர் - இந்தியா' விமான நிறுவனத்தில் பயணிகளை வரவேற்கும் விதமாக இருந்த மகாராஜா லோகோவுக்கு பதிலாக, ஜீன்ஸ் பேன்ட் அணிந்த இளைஞர் ஒருவர் வரவேற்பது போன்ற, புதிய லோகோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 'ஏர் - இந்தியா' விமான நிறுவனம், தங்களின் பயணிகளை கவரும் வகையில், மகாராஜா என்ற லோகோவை ஏற்கனவே அறிமுகப்படுத்தியது. பெரிய முறுக்கு மீசை தலைப்பாகை அணிந்து, பெரிய முறுக்கு மீசை வைத்திருக்கும் ஒருவர், தலையை குனிந்து, பயணிகளை வரவேற்பது போன்ற, மகாராஜா லோகோ இடம் பெற்றிருந்தது. இந்த மகாராஜா, நீண்ட குர்தா அணிந்திருப்பதுடன், கால்களில், மன்னர்கள் அணிந்திருப்பது போன்ற செருப்பையும் அணிந்திருப்பார். தற்போது, காலம் மாறி விட்டதை தொடர்ந்து, பழமையான இந்த மகாராஜா லோகோவும் மாற்றப்பட்டு, புது வடிவம் பெற்றுள்ளது. நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்றதும், இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஸ்டைலான அலங்காரம்:இதன்படி, பழைய மகாராஜாவுக்கு பதிலாக, ஜீன்ஸ் அணிந்த இளைஞர் படம் இடம் பெற்றுள்ளது. இந்த இளைஞர், தலைப்பாகை அணியவில்லை. அதற்கு பதிலாக, தற்போதைய இளைஞர்களை போல், ஸ்டைலான சிகை அலங்காரத்துடன் காணப்படுகிறார். மேலும், பேக் ஒன்றை, முதுகில் தொங்கவிட்டு உள்ள இந்த இளைஞர், மொபைல் போனையும் கையில் வைத்துள்ளார். ஆனாலும், பழைய மகாராஜாவின் முறுக்கு மீசையை இந்த இளைஞரும் வைத்துள்ளார். மீசையின் அளவு மட்டும் சற்று குறைந்துள்ளது.
பழைய மகாராஜா லோகோ, 1946ல் அறிமுகப்படுத்தப்பட்டது.அப்போதைய ஏர் - இந்தியா வர்த்தக பிரிவு இயக்குனர் பாபி கூகாவின் உத்தரவுப்படி, இந்த லோகோ உருவாக்கப்பட்டது.ஜே வால்டர் தாம்சன் லிட்., என்ற நிறுவனத்தின் கார்ட்டூனிஸ்ட், இந்த லோகோவை உருவாக்கினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|