பதிவு செய்த நாள்
29 ஜன2015
12:26
டாடா மோட்டர்ஸ் நிறுவனத்தின், ‘போல்ட்’ என்ற புதிய சொகுசு கார் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய காரை, டாடா மோட்டர்சின் பயணியர் வாகன வர்த்தக பிரிவு தலைவர் மாயன்க் பரீக் மற்றும் விற்பனை பிரிவு தலைவர் ஆசிஷ் ஆகியோர் அறிமுகப்படுத்தினர்.
‘போல்ட்’ சிறப்பு அம்சங்கள் வருமாறு...
* பெட்ரோல் மற்றும் டீசல் என இரு வகைகளில் இந்த கார் கிடைக்கும்.
* ‘ஸ்போர்ட், ஈகோ மற்றும் சிட்டி’ என்ற மூன்று விதமான, ‘மல்டி டிரைவ்’ ஓட்டும் திறன் கொண்டது.
* டீசல் காரில், ரெவோடிரான் 1.2 டர்போ இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
* ஒன்பதாம் தலைமுறை ‘ஏ.பி.எஸ்., ஏர்பிரேக்’ வசதி உள்ளது.
* இரண்டு ‘ஏர் பேக்’ வசதி செய்யப்பட்டுள்ளது.
* பெட்ரோல் காரில், ரெவோடிரான் 1.2 டி’ இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
* பெட்ரோல் காரின் ஆரம்ப கட்ட விலை, 4.43 லட்சம் ரூபாய்; டீசல் காரின் ஆரம்ப கட்ட விலை, 5.52 லட்சம் ரூபாய்.
* இந்த கார்களுக்கு, மூன்று ஆண்டுகள் அல்லது, ஒரு லட்சம் கிலோ மீட்டர் வரை உத்தரவாதம் வழங்கப்படும்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|