இனி ரசம் கிடைக்­காது உயர்ந்­தது பூண்டு விலை இனி ரசம் கிடைக்­காது உயர்ந்­தது பூண்டு விலை ... இந்திய ரூபாயின் மதிப்பு குறைவு இந்திய ரூபாயின் மதிப்பு குறைவு ...
மீண்டும் வங்கி வட்டி குறைய வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 பிப்
2015
03:45

புது­டில்லி:ரிசர்வ் வங்கி, நாளை வெளி­யிட உள்ள நிதி சீராய்வு கொள்­கையில், மீண்டும் வங்­கி­க­ளுக்­கான வட்டி விகி­தத்தை குறைக்கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. கடந்த மாதம், யாரும் எதிர்­பா­ராத வகையில், ரிசர்வ் வங்கி, வங்­கி­க­ளுக்கு வழங்கும் குறு­கிய கால கடன்­க­ளுக்­கான, ‘ரெப்போ’ வட்டி விகி­தத்தை, 0.25 சத­வீதம் குறைத்து, 7.75 சத­வீ­த­மாக நிர்­ண­யித்­தது. அதுபோல், வங்­கிகள், ரிசர்வ் வங்­கி­யிடம் பெறும் கட­னுக்­கான, 'ரிவர்ஸ் ரெப்போ' வட்டி, 0.25 சத­வீதம் குறைக்­கப்­பட்டு, 6.75 சத­வீ­த­மாக நிர்­ண­யிக்­கப்­பட்­டது.
இந்­நி­லையில், கடந்த டிசம்பர் மாதம், சில்­லரை பண­வீக்கம், 5 சத­வீ­த­மா­கவும், மொத்த விலை பண­வீக்கம், 0.1 சத­வீ­த­மா­கவும் குறைந்­தது. இது மட்­டு­மின்றி, பொதுத் துறை நிறு­வ­னங்­களின் பங்கு விற்­ப­னையால், மத்­திய அரசின் நிதிப் பற்­றாக்­குறை சமா­ளிக்­கப்­படும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. ரூ.22,500 கோடி:சில தினங்­க­ளுக்கு முன், கோல் இந்­தி­யாவின், 10 சத­வீத பங்கு விற்­பனை மூலம், மத்­திய அர­சுக்கு, 22,500 கோடி ரூபாய் கிடைத்­துள்­ளது. இது­த­விர, ஏற்­க­னவே செயில் நிறு­வன பங்கு விற்­பனை மூலம், 1,719 கோடி ரூபாய் கிடைத்­துள்­ளது. மார்ச்­சுக்குள், மேலும் பல பொதுத் துறை நிறு­வ­னங்­களின் பங்கு விற்­பனை நடை­பெற உள்­ளது. இதனால், பங்கு விற்­ப­னைக்கு நிர்­ண­யிக்­கப்­பட்ட, 43,425 கோடி ரூபாய் என்ற இலக்கை, மத்­திய அரசு உயர்த்தும் என தெரி­கி­றது. இந்­நி­லையில், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்­சியால், நாட்டின் நடப்பு கணக்கு, பற்­றாக்­குறை என்ற நிலையில் இருந்து, உப­ரி­யாக வாய்ப்­புள்­ள­தாக மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது.
எதிர்பார்ப்பு:மேற்­கண்ட கார­ணங்­களால், ரிசர்வ் வங்கி, 'ரெப்போ' வட்டி விகி­தங்­களை, மேலும் 0.25 சத­வீதம் அள­வுக்கு குறைக்கும் என, தெரி­கி­றது. கடந்த ஆண்டை ஒப்­பிடும் போது, இவ்­வாண்டில், மொத்தம் ஒரு சத­வீதம் வட்டி குறைப்பு இருக்கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக, வங்­கி­யா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர். இதன் தாக்­கத்தால், வாகனம், வீடு உள்­ளிட்ட கடன்­க­ளுக்­கான வட்டி குறையும். அதே சமயம், டிபா­சிட்­டு­க­ளுக்­கான வட்­டியும் குறையும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)