பதிவு செய்த நாள்
19 பிப்2015
17:56
மும்பை : இந்திய பங்குசந்தைகள் தொடர்ந்து ஏழாவது நாளாக உயர்வுடன் முடிந்தன. இன்றைய வர்த்தகம் துவங்கும்போதே பங்குசந்தைகள் உயர்வுடன் துவங்கின. ஆனால் அதன்பின்னர் பங்குசந்தைகளில் லேசான சரிவு காணப்பட்டது. ஆனாலும் பட்டெஜ் மீதான எதிர்பார்ப்பு, நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் சில நிறுவனங்கள் அதற்கான உரிமம் பெற்றதால், அந்த நிறுவன பங்குகள் உயர்ந்தது போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகள் இறுதியில் உயர்வுடன் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில், மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 142.01 புள்ளிகள் உயர்ந்து 29,462.27–ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 26.20 புள்ளிகள் உயர்ந்து 8,895.30–ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 20 நிறுவன பங்குகள் உயர்வுடன் முடிந்தன. குறிப்பாக உலோகம் தொடர்பான பங்குகள் 3.82 சதவீதமும், முதலீட்டு தொடர்பான பங்குகள் 1.36 சதவீதமும், எரிசக்தி பங்குகள் 0.86 சதவீதமும், ஐடி பங்குகள் 0.79 சதவீதமும் உயர்வுடன் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|