பட்ஜெட்! சிறப்பு வர்த்தகம் – சென்செக்ஸ் 262 புள்ளிகள் உயர்வுபட்ஜெட்! சிறப்பு வர்த்தகம் – சென்செக்ஸ் 262 புள்ளிகள் உயர்வு ... சென்செக்ஸ் 220 புள்ளிகள் உயர்வுடன் துவங்கியது சென்செக்ஸ் 220 புள்ளிகள் உயர்வுடன் துவங்கியது ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பட்ஜெட் – பங்குசந்தைகளில் அதிக ஏற்ற–இறக்கம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 பிப்
2015
16:53

மும்பை : மத்திய அரசு தாக்கல் செய்த 2015–16ம் ஆண்டுக்கான பட்ஜெட்டால் பங்குசந்தைகளில் அதிகளவில் ஏற்ற – இறக்கத்துடன் இருந்தன. இருப்பினும் இறுதியில் பங்குசந்தைகள் உயர்வுடன் முடிந்தன. இதற்கு முன்னர் கடந்தாண்டு மூன்று ஆண்டுகளில் பட்ஜெட் தாக்கல் செய்த போது பங்குசந்தைகள் சரிவை சந்தித்தன. ஆனால் இந்தாண்டு உயர்வுடன் முடிந்துள்ளன.
மோடி அரசு பொறுப்பேற்ற பின்னர் தாக்கல் செய்யும் முதல்பட்ஜெட் என்பதால் அதிக எதிர்பார்ப்புகள் இருந்தது. இதனால் இன்றைய வர்த்தகம் துவங்கும் போது உயர்வுடன் துவங்கின. பட்ஜெட் தாக்கல் செய்தவற்கு முன்னர் பங்குசந்தைகளில் சென்செக்ஸ் 200 புள்ளிகள் உயர்வுடன் இருந்தது. ஆனால் அதன்பின்னர் பட்ஜெட் பற்றிய அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வௌியாக பங்குசந்தைகள் சரிய தொடங்கின. குறிப்பாக சேவை வரி 14 சதவீதமாக உயர்த்தப்பட்டதால் பங்குசந்தைகள் சரிவை சந்தித்தன. இருப்பினும் கார்பரேட் வரி குறைக்கப்பட்டது உள்ளிட்ட அறிவிப்புகளால் பங்குசந்தைகள் உயர்வுடன் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 141.38 புள்ளிகள் உயர்ந்து 29,361.50–ஆக முடிந்தது. இதேப்போல் தேசிய பங்குசந்தையின் நிப்டி 57.25 புள்ளிகள் உயர்ந்து 8,901.85–ஆக முடிந்தது.
இன்றைய வர்த்தகத்தில் ஆக்சிஸ் வங்கி, டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ., டாக்டர் ரெட்டி, இந்துஸ்தான் யுனிலீவர், சிப்லா, கெயில் டாடா ஸ்டீல், எச்டிஎப்சி., இன்போசிஸ், ரிலையன்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவன பங்குகள் உயர்வுடன் முடிந்தன. அதேசமயம் ஐடிசி நிறுவன பங்குகள் 8 சதவீதம் சரிவை சந்திதது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)