பதிவு செய்த நாள்
04 மார்2015
10:17
மும்பை : இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது. இதன் காரணமாக, பங்குச்சந்தை, இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்ததில், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 431.01 புள்ளிகள் உயர்ந்து 30,024.74 என்ற அளவில் உள்ளது சென்செக்ஸ் முதன்முறையாக 30 ஆயிரம் புள்ளிகளை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல, தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 122.95 புள்ளிகள் உயர்ந்து 9,119.20 என்ற அளவில் உள்ளது.
கடந்த 4 செசன்களில், சென்செக்ஸ் 847.08 புள்ளிகள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற ஆசிய பங்குச்சந்தைகளான ஹாங்காங் பங்குச்சந்தை 0.32 சதவீதமும், ஜப்பான் பங்குச்சந்தை 0.66 சதவீதம் சரிவுடனும் பங்குவர்த்தகத்தை துவக்கியுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|