பதிவு செய்த நாள்
05 மார்2015
12:15
‘ஹார்லி டேவிட்சன்’ என்பது, உலகளவில் சூப்பர் பைக்குகளை விற்பனை செய்யும் அமெரிக்க நிறுவனம். இந்தியாவில், இந்த நிறுவனம், 2009ல் தான் காலடி எடுத்து வைத்தது. அரியானா மாநிலம், குர்கானில், இதன் தொழிற்சாலை உள்ளது. இந்தியாவில், 11 மாடல் சூப்பர் பைக்குகளை இந்த நிறுவனம் உற்பத்தி செய்கிறது. இதன் ஆரம்பநிலை பைக்கிலேயே, 700 சிசி திறன் கொண்ட இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் விலை, 5 லட்சம் ரூபாய் என்ற அளவில் துவங்கும். அதே நேரத்தில், ராயல் என்பீல்டு என்ற இந்திய நிறுவனம், 1956ல், தனது விற்பனையை துவக்கிய நிறுவனம். ‘புல்லட்’ பைக் என்பது, இந்த நிறுவனத்தின் சிறந்த தயாரிப்புகளில் ஒன்று.25 ஆண்டுகளுக்கு முன், ‘புல்லட்’ பைக் வைத்திருப்பது, கவுரவ சின்னமாக கருதப்பட்டது.
சென்னை, திருவொற்றியூரில் தான், ராயல் என்பீல்டு தொழிற்சாலை உள்ளது. இந்த நிறுவனம், ‘புல்லட்’ பெயரில், மூன்று: ‘தன்டர்பேர்டு பெயரில், இரண்டு; ‘கிளாசிக்’ பெயரில், ஐந்து மற்றும் கான்டினென்டல் ஜிடி ஆகிய மாடல் பைக்குகளை விற்பனை செய்து வருகிறது. இதன் மிக அதிகபட்ச விலை என்பது, 2 லட்சம் ரூபாய் தான்.
கடந்த, 2014ல், பைக் விற்பனையில், அமெரிக்காவின் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தை, திருவொற்றியூர் ராயல் என்பீல்டு நிறுவனம் வெற்றி கண்டுள்ளது. கடந்த ஆண்டு, ராயல் என்பீல்டு நிறுவனம், 3 லட்சம் பைக்குகளை விற்பனை செய்துள்ளது. ஹார்லி டேவிட்சன் நிறுவனம், 2.67 லட்சம் பைக்குகளை மட்டுமே விற்பனை செய்துள்ளது.
பத்து ஆண்டுகளுக்கு முன், இந்திய இருசக்கர வாகன சந்தையில், வெளிநாட்டு நிறுவனங்கள் காலடி எடுத்து வைத்தன. அப்போது, ராயல் என்பீல்டு நிறுவனம், மிக குறைந்த எண்ணிக்கையில் தான், பைக்குகளை விற்பனை செய்து வந்தது. எனினும், வெளிநாட்டு நிறுவனங்களுடன் போட்டி போடும் அளவுக்கு, ராயல் என்பீல்டு நிறுவனம் வளர்ச்சி கண்டுள்ளது. வாரன்டி சலுகை ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு இதற்கு முன், ஒரு ஆண்டு வாரன்டி சலுகை மட்டுமே அளிக்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு, இரண்டு ஆண்டு அல்லது, 20,000 கி.மீ., வரை வாரன்டி காலத்தை நீட்டித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|