பதிவு செய்த நாள்
12 மார்2015
17:30
மும்பை : இந்திய பங்குசந்தைகள் கடந்த சில நாட்களாக மந்தமாகவும், சரிவுடனும் காணப்பட்ட நிலையில் இன்று(மார்ச் 12ம் தேதி) அதிக எழுச்சி கண்டன. பிப்ரவரி மாதத்திற்கான பணவீக்கம் மற்றும் தொழில்துறை உற்பத்தியின் மீதான எதிர்பார்ப்பாலும், நடப்பாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதம் அளவு இருக்கும் என பன்னாட்டு நிதி அமைச்சகம் தெரிவித்திருப்பதாலும், இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீட்டை அதிகரிக்க பார்லிமென்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மசோதா... உள்ளிட்ட காரணங்களால், முதலீட்டாளர்கள் அதிகளவு பங்குகளை வாங்கி குவித்ததால் இன்றைய வர்த்தகம் அதிக ஏற்றத்துடன் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 271.24 புள்ளிகள் உயர்ந்து 28,930.41–ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 76.05 புள்ளிகள் உயர்ந்து 8,776–ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில், 24 நிறுவன பங்குகள் உயர்வுடன் முடிந்தன. குறிப்பாக ஸ்டெர்லைட், என்டிபிசி., ஹண்டால்கோ, சன்பார்மா, பெல், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், ஐடிசி., ஐசிஐசிஐ., பார்த்தி ஏர்டெல், இன்போசிஸ், கெயில் உள்ளிட்ட நிறுவன பங்குகள் அதிக ஏற்றத்துடன் முடிந்தன. இவைகள் தவிர்த்து இன்சூரஸ் துறை பங்குகளான ரிலையன்ஸ் கேபிட்டல், மேக்ஸ் இந்தியா, ஆதித்யா பிர்லா மற்றும் பஜாஜ் பினான்சியல் சர்வீஸ் நிறுவன பங்குகளும் உயர்வுடன் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|