பதிவு செய்த நாள்
19 மார்2015
10:17
மும்பை : உலகளவில் பங்குசந்தைகளில் காணப்படும் உயர்வால், இந்திய பங்குசந்தைகளும் அதிரடியாக உயர்வுடன் துவங்கியுள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ், 349.79 புள்ளிகள் உயர்ந்து 28,971.91-ஆகவும், தேசிய பங்குசந்தையின் குறியீட்டு நிப்டி 99.95 புள்ளிகள் உயர்ந்து 8,785.85-ஆகவும் இருந்தன.
அமெரிக்காவின் பெடரல் வங்கி வட்டி வகிதங்களை உயர்த்த இருப்பதால் அந்நாட்டு பங்குசந்தைகள் உயர்வுடன் முடிந்தன. இதன்காரணமாக ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குசந்தைகளும் உயர்வுடன் காணப்படுகின்றன. மேலும் முதலீட்டாளர்களும் அதிகளவில் பங்குகளை வாங்க தொடங்கியதால் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் காணப்படுகின்றன.
இந்திய பங்குசந்தைகள் தவிர்த்து ஆசியாவின் இதர பங்குசந்தைகளான ஹாங்காங்கின் ஹேங்சேங் 1.47 சதவீதமும், ஜப்பானின் நிக்கி 0.65 சதவீதமும் உயர்வுடன் காணப்படுகின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|