சரிவுடன் துவங்கியது பங்குவர்த்தகம்சரிவுடன் துவங்கியது பங்குவர்த்தகம் ... தங்கம் சவரனுக்கு ரூ. 72 குறைவு தங்கம் சவரனுக்கு ரூ. 72 குறைவு ...
தம்ஸ் அப் பிரான்ட் அம்பாசடராக விஷால் நியமனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஏப்
2015
10:56

பிரபல திரை நட்சத்திரம் விஷால் ‘தம்ஸ் அப்’பின் பிரான்ட் அம்பாசடராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தபிராண்டுடன் இணைந்திருப்பதை அறிவிக்கும் வகையில் அதிரடி ஹீரோ விஷால் சென்னை அருகே நேமத்தில் உள்ள இந்துஸ்தான் கோகோ கோலா பாட்டிலிங் ஆலைக்கு சென்று அங்கு தயாராகும் முதல் தம்ஸ் அப் பானத்தை அருந்தினார். கோகோ கோலா குடும்பத்தில் விஷால் இணைந்திருப்பதை இந்துஸ்தான் கோகோ கோலா பிவ்ரேஜ் பிரைவேட் லிமிடெட் தலைமை செயல் அதிகாரி டி.கிருஷ்ணகுமார் வரவேற்றார். நிறுவனத்தின் டி சர்ட்டையும் தொப்பியையும் அவர் வழங்கினார். அவருக்குபிடித்தமான குளிர்பானத்தையும் அவர் வழங்கினார். அந்த ஆலையில் பாட்டிலிங் லைன், குளிர்பானத்தை பாட்டிலில் அடைத்தல் பின்னர் பேக் செய்து வாகனத்தில் ஏற்றுதல் உள்ளிட்ட ஆலையின் அனைத்து பிரிவுகளையும் சென்றுபார்த்தார். வெறும் தண்ணீர் உள்ள பகுதி, எழு கட்ட தண்ணீர் வடிகட்டும் பிரிவு, கழிவுநீரை சுத்தப்படுத்தி மீண்டும் பயன்படுத்துதல், கழிவுநீர்சுத்திகரிப்பு நிலையம், திடக்கழிவுகளை அகற்றும் பிரிவு உள்ளிட்ட வசதிகளை நடிகர் விஷால் பார்வையிட்டார்.
விஷால் ஆலையை சுற்றிப்பார்க்கும் போது அவருடன் கோகோ கோலா தென்மேற்கு ஆசிய பிரிவு சந்தையிடல் மற்றும் வர்த்தகப்பிரிவு பிரிவுதுணைத்தலைவர் திரு. தேவபிரதா முகர்ஜி,, வர்த்தகப்பிரிவு துணைத்தலைவர் திரு சங்கத் ரே, இந்துஸ்தான் கோகோ கோலா பிவ்ரேஜஸ் தமிழ்நாடு மண்டல துணைத்தலைவர் திரு. ஆனந்த் ராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய இந்துஸ்தான் கோகோ கோலா பிவரேஜ் பிரைவேட் லிமிடெட் தலைமை செயல் அதிகாரி திரு.டி.கிருஷ்ணகுமார், தமிழகத்தில் தம்ஸ் அப் இப்போதுகிடைக்கத் துவங்கியிருப்பதால் எங்களது வாடிக்கையாளர்களுக்கு மேலும் ஒரு குளிர்பானத்தை தேர்வு செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது. வலிமையான ருசி, சிறந்தமனம், ஆகியவை நாடு முழுவதும் கடந்த 35 ஆண்டுகளாக நுகர்வோரை அதன்பால் ஈர்த்து வருகிறது. மேலும் தமிழ்நாட்டின் வாடிக்கையாளர்கள் தம்ஸ் அப்பை தேர்வு செய்வது என்பது அவர்களின் பணத்திற்கு கூடுதல் மதிப்பாகவும் இருக்கும்.
தம்ஸ் அப் நிறுவனத்துடனான ஒத்துழைப்பு என்பது அந்த நிறுவனத்துடன் இணைந்து, தாமும் வளர்ச்சியடைய உதவும் என்று விஷால் தெரிவித்தார். விஷால் தோன்றும்விளம்பரத்தை லியோ பெர்னெட் உருவாக்கியுள்ளது. லியோ பெர்னெட்டின் தேசிய கிரியேட்டிவ் இயக்குநர் சாய்நாத் சராபன் உருவாக்கியுள்ளார். ஆர்.யு பிலிம் புராடக்ஷன் நிறுவனத்தின் கீழ் கபில்சர்மா இதனை இயக்கியுள்ளார். இதற்கு ஓம் குரோவ்ன் மியூசிக் நிறுவனத்தின் ராம்சம்பத் இசையமைத்துள்ளார். இன்னும் சில நாட்களில் இந்த விளம்பரம் ஒளிப்பரப்பாகவுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)