பதிவு செய்த நாள்
22 ஏப்2015
10:06
மும்பை : வார வர்த்தகத்தின் மூன்றாம் நாளான இன்று பங்குவர்த்தகம் உயர்வுடன் துவங்கியுள்ளது.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 151.62 புள்ளிகள் அதிகரித்து 27,827.66 என்ற அளவில் உள்ளது.
கடந்த 5 செசன்களில், சென்செக்ஸ் 1368.40 புள்ளிகள் அளவிற்கு சரிவடைந்திருந்த நிலையில், இன்றைய வர்த்தகநேர துவக்கத்தி்ல், சென்செக்ஸ் உயர்வுடன் துவங்கியிருப்பது பங்குமுதலீட்டாளர்களை சற்று நிம்மதியடைய வைத்துள்ளது.
தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 45.45 புள்ளிகள் அதிகரித்து 8,423.20 என்ற அளவில் உள்ளது. நிப்டி, மீண்டும் 8,400 என்ற அளவை எட்டியிருப்பது குறி்ப்பிடத்தக்கது.
மற்ற ஆசிய பங்குச்சந்தைகளான ஹாங்காங் பங்குச்சந்தை 0.54 சதவீதமும், ஜப்பான் பங்குச்சந்தை 1.08 சதவீத உயர்வுடன் பங்குவர்த்தகத்தை துவக்கியுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|