பதிவு செய்த நாள்
23 ஏப்2015
10:20
மும்பை : இந்திய பங்குசந்தைகள் உயர்வுடன் துவங்கி இருக்கின்றன. இதன்மூலம் சென்செக்ஸ் மீண்டும் 28 ஆயிரம் புள்ளிகளை கடந்துள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 164.34 புள்ளிகள் உயர்ந்து 28,054.47 புள்ளிகளிலும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 72.35 புள்ளிகள் உயர்ந்து 8,502.05 புள்ளிகளிலும் வர்த்தகமாகின. மத்திய அரசு டிடிஏஏ.வில் இருந்து விலக்கு அளித்திருப்பது சில்லரை வர்த்தக முதலீட்டாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இதனால் இதுதொடர்பான பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவில் வாங்கி வருவதும், ஆசிய பங்குசந்தைகளில் காணப்படும் ஏற்றத்தாலும் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் காணப்படுவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய பங்குசந்தைகள் தவிர்த்து ஆசியாவின் இதர பங்குசந்தைகளான ஹாங்காங்கின் ஹேங்சேங் 0.50 சதவீதமும், ஜப்பானின் நிக்கி 0.34 சதவீதமும் உயர்வுடன் காணப்பட்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|