ஸ்மார்ட் ஆடைகள் தயாரிப்பில் இறங்குகிறது கூகுள்ஸ்மார்ட் ஆடைகள் தயாரிப்பில் இறங்குகிறது கூகுள் ... பெண்கள் போல முத­லீடு செய்­யுங்கள்!-  இது வாரன் பப்பே வழி! பெண்கள் போல முத­லீடு செய்­யுங்கள்!- இது வாரன் பப்பே வழி! ...
வெற்றி தரும் ஐந்து மாற்றி யோசி மந்­தி­ரங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2015
01:19

தொழில்­மு­னை­வோ­ராக முத்­திரை பதித்த முன்­னோ­டிகள் எல்லா­ருமே நம்­மை­ போன்­ற­வர்கள் தான். ஆனால், அவர்­களின் அணு­கு­மு­றையில் தான் வேறு­பாடு இருக்­கி­றது. அந்த அணுகுமுறைகளில் முக்கியமானதாக தொழில் வல்லுனர்கள் அடையாளம் காட்டுவது மேற்கண்ட இவற்றை தான்.
1. தொடர் முத­லீடு:தீவிர தொழில்­மு­னைவோர் தொடர்ந்து முத­லீட்­டிற்­கான வாய்ப்­பு­களை தேடிக்­கொண்­டி­ருக்­கின்­றனர். அவர்கள் எதையும் முடி­வாக கரு­து­வ­தில்லை. அவர்கள் சம்­பா­திப்­பதை விட குறை­வாக செலவு செய்து, லாபத்தை மறு முத­லீடு செய்­கின்­றனர்.
2. பிர­ச்­னையில் தீர்­வுகள்:தொழில்­மு­னைவோர் பிரச்னைகளை கண்டு ஒடுங்­கிப்­போ­வ­தில்லை; அஞ்­சு­வதும் இல்லை. தடைகள் தாண்­டு­வ­தற்கு என்­பதே அவர்­களின் எண்­ண­மாக இருக்­கி­றது. எனவே பிரச்­­னைகள் வரும் போது அவற்றை அவர்கள் வாய்ப்­பு­க­ளா­கவே பார்க்­கின்­றனர். அவர்கள் எப்­போ­துமே முன்னேற்றத்திற்கான தீர்­வு­களை தேடிக் ­கொண்­டி­ருக்­கின்­றனர்.
3.சுயதிறன் வளர்ப்பு:தொழில்­மு­னைவோர் எப்­போதும் தங்கள் திறனில் முத­லீடு செய்து அதை மேம்­ப­டுத்­திக்­கொள்­வதில் ஆர்வம் காட்­டு­கின்­றனர்.
4.சொத்து மதிப்பு :தொழில்­மு­னைவோர் தங்கள் நிறு­வ­னத்தின் உரி­மையை காத்து, அதன் மதிப்பை உயர்த்தும் வகையில், எதிர்­கால நோக்கில் நீண்டகால முத­லீடு செய்­கின்­றனர்.
5.பலத்தில் கவனம்:வெற்­றி­க­ர­மான தொழில்­ மு­னைவோர் தங்கள் பலம் மற்றும் பல­வீ­னங்­களை அறிந்­தி­ருக்­கின்­றனர். தங்கள் பலத்தில் கவனம் செலுத்தி பல­வீ­ன­மான விஷ­யங்களை உரி­ய­வர்­க­ளிடம் ஒப்­ப­டைக்­கின்­றனர்.
பொருளாதார செய்திகள்
இந்­தி­யாவின் ஜி.டி.பி., வளர்ச்சி 7.3 சத­வீ­த­ம்
2014 – 15ல் இந்­தி­யாவின் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி, 7.3 சத­வீ­த­மாக இருக்­கி­றது.மார்ச் வரை­யி­லான காலாண்டில் இது, 7.5 சத­வீ­த­மாக இருக்­கி­றது. இந்­தி­யாவின் பொரு­ளா­தார வளர்ச்சி சீனாவை மிஞ்­சக்­கூ­டி­ய­தாக இருக்கும் என, ஐ.நா.,வின் அறிக்கை சமீ­பத்தில் தெரி­விக்கப்பட்ட நிலையில், நாட்டின் ஜி.டி.பி., வளர்ச்சி உயர்ந்துள்ளது. இந்த ஆண்டும் வளர்ச்சி தொடரும் என நம்­பிக்­கை கொடுத்­தாலும், விவ­சா­ய ­து­றையின் வளர்ச்சி 0.2 சத­வீ­த­மாக இருப்­பது கவலை அளிக்கிறது.
இ.பி.எப்.,யில் கோரப்படாமல் ரூ.27,000 கோடி
தொழிலாளர் சேம நல நிதியில்(இ.பி.எப்.,) ரூ.27,000 கோடி உரியவர்களால் கோரப்படாமல் இருப்பதாக மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார். விஜயவாடாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதை தெரிவித்த அமைச்சர் இந்த நிதியை தொழிலாளர் நலனுக்காக பயன்படுத்திக்கொள்ளும் வகையில் திட்டங்கள் பரிசீலிக்கப்படுவதாக தெரிவித்தார். இ.பி.எப்., நிதியில் தற்போது 8.62 லட்சம் கோடி ரூபாய் டெபாசிட் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த வார வலைதளம்

http://indianmoney.com
முதலீடு தொடர்பாக உங்கள் மனதில் எழும் சந்தேகங்களுக்கு விளக்கம் தேவைப்படுகிறதா? இந்தியன் மணி இணையதளத்தில் உங்கள் கேள்விகளுக்கான விளக்கம் காத்திருக்கிறது. இந்த இணையதளம் நிதி சேவைக்கான உதவி மையமாக செயல்படுகிறது. சேமிப்பு, கடன் வசதி, முதலீடு, வரி என்று நிதித்துறை சார்ந்த விஷயங்கள் தொடர்பான சந்தேகங்களுக்கு வல்லுனர்கள் மூலம் விளக்கம் அளிக்கிறது இந்த தளம்.இந்த தளத்தில் விளக்கத்தை பெறுவதும் சுலபம் தான். தளத்தில் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் அதன் வல்லுனர்கள் உங்களை தொடர்பு கொண்டு பேசி ஆலோசனை வழங்குவர் என, இந்த தளம் தெரிவிக்கிறது.

நிதி அக­ராதி
மார்கெட் கேபி­ட­லை­சேஷன்-Market Capitalisationஒரு நிறு­வ­னத்தின் மதிப்பை அள­விட, பல வழிகள் இருக்­கின்­றன. விற்­பனை,வருவாய், லாபம், வர்த்­தக அளவு என, பல அம்­சங்­களை கொண்டு நிறு­வ­னங்­களை மதிப்­பி­டலாம். இவற்றில் பங்­குச்­சந்­தையில் ஒரு நிறு­வ­னத்தின் மதிப்பே மார்கெட் கேபி­ட­லை­சேஷன் என்று குறிப்­பி­டப்­ப­டு­கி­றது.
சுருக்­க­மாக, ‘மார்கெட் கேப்’ என்றும் குறிப்­பி­டப்­ப­டு­கி­றது. அதா­வது சந்தை மதிப்பு. நிறு­வன பங்கு ஒன்றின் தற்­போ­தைய விலையை கொண்டு அதன் மொத்த பங்­கையும் பெருக்கும் போது வரும் தொகையே, நிறு­வ­னத்தின் சந்தை மதிப்பு என்று குறிப்­பி­டப்­ப­டு­கி­றது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)