பதிவு செய்த நாள்
02 ஜூலை2015
16:47
மும்பை : ஏற்றத்துடன் துவங்கிய இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் முடிந்தன. முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்க தொடங்கியதால் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் துவங்கின. ஆனால் மதியத்திற்கு பின்னர் வர்த்தகம் சரிய தொடங்கின. முக்கியமான சில நிறுவனங்கள் பங்குகளின் விலை உயர்வுடன் இருந்ததால் லாபம் நோக்கம் கருதி முதலீட்டாளர்கள் பங்குகளை விற்க தொடங்கினர். இதனால் இன்றைய வர்த்தகம் சரிவுடன் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 75.07 புள்ளிகள் சரிந்து 27,945.80-ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 8.15 புள்ளிகள் சரிந்து 8,444.90-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 20 நிறுவன பங்குகள் சரிவுடன் முடிந்தன. குறிப்பாக இன்றைய வர்த்தகத்தில் சிப்லா, ஓஎன்ஜிசி., மாருதி சுசூகி, கெயில், எச்டிஎப்சி., டாக்டர் ரெட்டி, இன்போசிஸ், என்டிபிசி., எல்அண்ட்டி., டாடா ஸ்டீல், டிசிஎஸ், சன்பார்மா போன்ற நிறுவன பங்குகள் சரிவுடன் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|