பதிவு செய்த நாள்
29 செப்2015
17:18
மும்பை : ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தை குறைத்தன் எதிரொலியாக சரிவிலிருந்த இந்திய பங்குச்சந்தைகள் மீண்டன. உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சுணக்கம் மற்றும் பொருளாதார சுணக்கம் காரணமாக இன்றைய வர்த்தகம் துவங்கும்போதோ சரிவுடன் துவங்கின. இந்தச்சூழலில் ரிசர்வ் வங்கியின் நிதிநிலை ஆய்வுக்கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்தின் முடிவில் ரெப்போ வட்டி வகிதத்தை 0.50 சதவீதம் குறைக்கப்பட்டது. இதன் எதிரொலியாக பங்குச்சந்தைகள் சரிவிலிருந்து மீண்டன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 161.82 புள்ளிகள் உயர்ந்து 25,778.66-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 47.60 புள்ளிகள் உயர்ந்து 7,843.30-ஆகவும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் வங்கி தொடர்பான பங்குகள் 0.90 சதவீதமும், ஆட்டோமொபைல் தொடர்பான பங்குகள் 0.76 சதவீதமும், எரிசக்தி தொடர்பான பங்குகள் 0.52 சதவீதமும், ஐடி., தொடர்பான பங்குகள் 0.38 சதவீதமும், பொதுத்துறை நிறுவன பங்குகள் 0.31 சதவீதமும் உயர்வுடன் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|