பதிவு செய்த நாள்
08 அக்2015
17:58
போர்டு நிறுவனத்தின் வெற்றிகர அறிமுகமான, ‘இகோஸ்போர்டு’ எஸ்.யு.வி., வாகனத்தின் புதிய மேம்படுத்தப்பட்ட மாடல் சந்தைக்கு வந்துள்ளது. ‘‘இகோஸ்போர்டு வாகனம், இரண்டு லட்சத்தையும் கடந்து அதிக அளவில் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், அதை மேலும் செம்மைப்படுத்தும் விதமாக, மேம்படுத்தப்பட்ட மாடலை, பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு களமிறக்கியுள்ளோம்,’’ என, போர்டு இந்தியா தலைவர், நிகில் ஹேரிஸ் கூறியுள்ளார்.
இதில், தற்போதைய இகோஸ்போர்டு வாகனத்தில் பயன்படுத்தப்படும், அதே, 1.5 லிட்டர், டி.டி.சி.ஐ., இன்ஜினை, மேலும் வலுவுள்ளதாக மாற்றி, பொருத்தப்பட்டுள்ளது. ‘இதில், உலக பிரசித்தி பெற்ற, ‘இகோபூஸ்ட்’ தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருப்பதால், ஒரு லிட்டர் டீசலுக்கு, 22.7 கி.மீ., மைலேஜ் கிடைக்கும்’ என, போர்டு இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுபோல், பெட்ரோல் மாடல், 1.5 லிட்டர் டி.ஐ.வி.சி.டி., இன்ஜின், லிட்டருக்கு, 15.85 கி.மீ., மைலேஜ் தரக்கூடியது. பண்டிகைகக்காக, ‘கோல்டன் பிரவுன்’ என்னும் புதிய வண்ணமும், அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வெளிச்சம் குறையும்போது தானாக எரியக்கூடிய, ‘ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப், சிக்னேச்சர் லைட்’ மழை வருவதை அறிந்து தானாக இயங்கும், ‘வைப்பர்’ மற்றும், ‘லெதர் சீட்’ பின்புற வாகனங்களின் முகப்பு விளக்கு வெளிச்சம், டிரைவரின் கவனத்தை சிதற விடுவதைத் தடுக்கும் வகையில், ‘எலக்ட்ரோ குரோமிங் ரியர்வியூ மிரர்’ பொருத்தப்பட்டிருப்பது சிறப்பு.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|