பதிவு செய்த நாள்
13 அக்2015
14:07
பியட் நிறுவனம், ‘பன்ட்டோ’ ரக காரில், கூடுதல் மாற்றங்களை செய்து, ‘அபார்த் பன்ட்டோ இவோ’ என்ற பெயரில், வரும், 19ல், அறிமுகம் செய்ய உள்ளது. இதற்கான முன்பதிவு துவங்கி உள்ளது. நீண்ட காலமாக இதைப் பற்றிய பேச்சு இருப்பதால், ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய காரில், நான்கு சிலிண்டர், 1.4 லிட்டர் டி-ஜெட் மோட்டார் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளதால், இந்தியாவில் உற்பத்தியாகும் மிகச் சக்தி வாய்ந்த, ‘ஹேட்ச்பேக்’ கார்களில் ஒன்றாக விளங்கும் என, ஆட்டோமொபைல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதன் முந்தைய மாடலான, பன்ட்டோ காரில் இல்லாத வகையில், கண்ணைக் கவரும், சிவப்பு – கறுப்பு; சாம்பல் மற்றும் ஆரஞ்ச் கலவை வண்ணங்களில் புதிய கார் கிடைக்கும். இதன் சக்கரங்களில், 16 அங்குல விட்டத்தில், ‘அலாய் ரிம்’ புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இது, டயர்களுக்கு கூடுதல் பாதுகாப்பை தரும்.
காரின் உட்புறத்தில், ஸ்போர்ட்ஸ் வாகனங்களில் இருப்பதைப் போல, அதிக அளவில் கறுப்பு வண்ணம் இடம் பெற்றுள்ளது. இருக்கைகளில், சிவப்பு மற்றும் மெல்லிய மஞ்சள் வண்ணம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை, 10 லட்சம் ரூபாய்க்குள் இருக்கும் என, தெரிகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|