பதிவு செய்த நாள்
13 அக்2015
14:08
போக்ஸ்வேகன் நிறுவனத்துக்கு இது, சோதனைக் காலம் போலிருக்கிறது. புகை மோசடி சாப்ட்வேர் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கியுள்ள அந்த நிறுவனம், இனி, இதுபோன்ற சிக்கல்களை சந்திக்கக் கூடாது என்பதில் கவனமாக உள்ளது.
அதனால், சிறிய பிரச்னையாக இருந்தாலும், அதற்கும் தீர்வு காண முயன்று வருகிறது. தன் மற்ற தயாரிப்புகளான, ‘ஆடி, ஸ்கோடா’ வாகனங்களையும் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளது. இந்த வரிசையில், இந்தியாவில், போலோ ரக கார்களின் விற்பனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
அவ்வகை கார்களில் பொருத்தப்பட்டுள்ள, ‘ஹேண்ட் பிரேக்’கில், சில சூழல்களில் பிரச்னை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுவதே, அதற்கு காரணம். பிரச்னை இருக்கலாம் என சந்தேகிக்கும், 389 கார்களை, அவற்றின் உரிமையாளர்களிடம் இருந்து திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது போக்ஸ்வேகன்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|