பதிவு செய்த நாள்
13 அக்2015
16:46
மும்பை : சரிவுடன் ஆரம்பித்த இந்திய பங்குச்சந்தைகள் இன்று(அக்., 13ம் தேதி) சரிவுடனேயே முடிந்தன. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சரிவாலும், முதலீட்டாளர்கள் லாபநோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததாலும் இன்றைய வர்த்தகம் நாள் முழுக்க சரிவிலேயே இருந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 57.58 புள்ளிகள் சரிந்து 26,846.53-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 11.90 புள்ளிகள் சரிந்து 8,131.70-ஆகவும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் 1526 நிறுவன பங்குகள் உயர்வுடனும், 1236 நிறுவன பங்குகள் சரிந்தும், 106 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் முடிந்தன. குறிப்பாக கோல் இந்தியா, ஐடிசி., பஜாஜ் ஆட்டோ மற்றும் பெல் நிறுவன பங்குகள் அதிக லாபமும், ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், இன்போசிஸ் நிறுவன பங்குகள் சரிவையும் சந்தித்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|