பதிவு செய்த நாள்
16 அக்2015
09:23
மும்பை : முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு பருப்பு வகைகளின் விலை, கடந்த ஓராண்டில் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. கிலோவுக்கு ரூ.200 வரை அதிகரித்துள்ளதால், சாமானிய மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர்.
நவராத்திரி, தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகை வரும் நாட்களில் அத்யாவசிய உணவுப் பொருட்களில் ஒன்றான பருப்பு வகைகளின் விலை விண்ணை தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது. மொத்த விற்பனை சந்தையில் கடந்த ஆண்டு ரூ.90 ஆக இருந்த பருப்பின் விலை தற்போது ரூ.190 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் ரூ.85 ஆக இருந்த ஒரு கிலோ உளுந்தம் பருப்பின் விலை, தற்போது ரூ.160க்கு விற்கப்படுகிறது.
ஒழுங்கற்ற வானிலை, விளைச்சல் சரிவு, இடைத்தரகர்களின் தலையீடு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. காரணம் எதுவாக இருந்தாலும், இந்த அதிரடி விலை உயர்வு மக்களை வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது. அத்துடன் இந்த விலைஉயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறி விட்டதால், மக்களிடம் அரசு மீது அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது. பருப்பு வகைகளின் விலை ஒருபுறம் உயர்ந்து கொண்டிருக்க, காய்கறிகளின் விலையும் மறுபுறம் உயர்ந்து வருகிறது.
சங்கிலித் தொடர் போன்று பருப்பு வகைகளின் விலை உயர்வு, உணவுப் பொருட்கள் பலவற்றின் விலையையும் உயர்த்தி உள்ளது. இதனால் சராசரி குடிமகனின் மாத பட்ஜெட்டை திக்கி திணற வைத்துள்ளது. விலை உயர்வை கட்டுப்படுத்தவும், பருப்பு வகைகளின் விலையை குறைக்க அதிக அளவில் பருப்பு இறக்குமதி செய்யவும் முயற்சி மேற்கொண்டு வருவதாக அரசு கூறினாலும், சாமானிய மக்களுக்கு அது சமாதானம் தரவில்லை. இதனால் அத்தியாவமிய உணவு பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த என்ன வழி என சந்தை நிபுணர்களும் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|