முட்டை உற்பத்தி 15 லட்சம் சரிவு - 10 காசு குறைத்து விற்க அறிவுரைமுட்டை உற்பத்தி 15 லட்சம் சரிவு - 10 காசு குறைத்து விற்க அறிவுரை ... தங்கம் விலை ரூ.16 உயர்வு தங்கம் விலை ரூ.16 உயர்வு ...
தங்கம் முதலீடு திட்டத்தில் மாற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2016
12:52

புதுடில்லி: தங்கத்தை பணமாக்கும் திட்டத்தில், முதலீடு செய்பவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், அதில் ஏராளமானோர் முதலீடு செய்யும் விதத்தில், முன்னதாகவே திரும்பப் பெறக் கூடிய வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
உலகிலேயே அதிக அளவில் தங்கத்தை பயன்படுத்தும் நாடாக இந்தியா இருப்பதால், வெளிநாடுகளில் இருந்து ஆண்டுக்கு, பல ஆயிரம் டன் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் அதிக அளவில், அன்னிய செலாவணி வீணாவதை தடுக்கும் வகையில், வீடுகளிலும், கோவில்களிலும் முடங்கியிருக்கும், 52 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள, 20 ஆயிரம் டன் தங்கத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர, தங்கத்தை பணமாக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ், பயன்படுத்தாத தங்கத்தை முதலீடு செய்து, அதற்கு வட்டியைப் பெறலாம். முதலீட்டு காலத்துக்குப் பின், தங்கமாக அல்லது பணமாகப் பெறலாம். அதிக முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக, திட்டத்தில் சில மாற்றங்களை, ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்தது. அதன் படி, முதலீட்டு காலத்துக்கு முன்பாகவே, திரும்பப் பெற முடியும்; ஆனால், வட்டி வீதம் குறையும்.
புதிய அறிவிப்புகள்* குறுகிய கால முதலீடு (1 --- 3 ஆண்டுகள்), இடைக்கால முதலீடு (5 - 7 ஆண்டுகள்), நீண்ட கால முதலீடு (12 - 15 ஆண்டுகள்) ஆகிய மூன்று திட்டங்கள் உள்ளன* தற்போது இடைக்கால முதலீட்டுக்கு, ஆண்டுக்கு, 2.25 சதவீதம், நீண்ட கால முதலீட்டுக்கு ஆண்டுக்கு, 2.5 சதவீத வட்டி தரப்படுகிறது* இடைக்கால முதலீட்டில், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும், நீண்ட கால முதலீட்டில், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும், முதலீட்டை திரும்பப் பெறலாம்* முதலீட்டு காலம், முன்னரே எடுக்கப்படும் காலம் ஆகியவற்றின் அடிப்படையில், வட்டி வீதம் குறையும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)