பதிவு செய்த நாள்
03 பிப்2016
17:52
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவுடன் முடிந்தன. இன்றைய வர்த்தகம் துவங்கும்போதே சரிவுடன் ஆரம்பித்த பங்குச்சந்தைகள், ரூபாயின் மதிப்பு ரூ68-ஐ எட்டியது, உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சுணக்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலையின் வீழ்ச்சி போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் நாள் முழுக்க சரிவுடனேயே முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 315.68 புள்ளிகள் சரிந்து 24,223.32-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 93.75 புள்ளிகள் சரிந்து 7,361.80-ஆகவும் முடிந்தன.
பங்குச்சந்தைகள் தொடர்ந்து 3வது நாளாக சரிவை சந்தித்துள்ளன. குறிப்பாக சென்செக்ஸ் கடந்த 3 தினங்களில் 647 புள்ளிகள் சரிந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 26 நிறுவன பங்குகள் சரிந்தும், 4 நிறுவன பங்குகள் உயர்வுடனும் முடிந்தன.
குறிப்பாக எரிசக்திதுறை பங்குகள் 4.16 சதவீதமும், முதலீட்டு தொடர்பான பங்குகள் 2.79 சதவீதமும், கட்டுமானதுறை பங்குகள் 2.30 சதவீதமும், உலோகம் தொடர்பான பங்குகள் 2.03 சதவீதமும், பொதுத்துறை நிறுவன பங்குகள் 1.96 சதவீதமும், வங்கி தொடர்பான பங்குகள் 1.63 சதவீதமும், ஆட்டோமொபைல் பங்குகள் 1.62 சதவீதமும், எண்ணெய் மற்றும் எரிவாயு பங்குகள் 1.58 சதவீதமும் சரிவை சந்தித்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|