பதிவு செய்த நாள்
04 பிப்2016
17:28
மும்பை : மூன்று நாட்கள் சரிவுக்கு பின்னர் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன. ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, கச்சா எண்ணெய் விலை சரிவு போன்ற காரணங்களால் கடந்த மூன்று தினங்களாக பங்குச்சந்தைகள் சரிந்தன.
இந்நிலையில் வாரத்தின் நான்காம் நாளான இன்று(பிப்.4ம் தேதி) பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கின. சென்செக்ஸ் 226 புள்ளிகளும், நிப்டி 56 புள்ளிகளும் உயர்வுடனும் துவங்கின. நாள் முழுக்க உயர்வுடனேயே இருந்த பங்குச்சந்தைகள் வர்த்தகம் முடியும்போது உயர்வுடனேயே முடிந்தன.
ஐரோப்பிய மற்றும் ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றத்தாலும், கச்சா எண்ணெய் விலை சற்று மீண்டதாலும், ரூபாயின் மதிப்பு மீண்டும் 68க்குள் கீ்ழ வந்ததாலும் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்க தொடங்கியதால் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் முடிந்ததாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 115.11 புள்ளிகள் உயர்ந்து 24,338.43-ஆகவும், நிப்டி 42.20 புள்ளிகள் உயர்ந்து 7,404-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 18 நிறுவன பங்குகள் உயர்ந்தும், 12 நிறுவன பங்குகள் சரிந்தும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் உலோகம் தொடர்பான பங்குகள் 2.48 சதவீதமும், ஐடி பங்குகள் 0.92 சதவீதமும், நுகர்வோர் தொடர்பான பங்குகள் 0.86 சதவீதமும், கட்டுமானம் மற்றும் எரிசக்தி பங்குகள் 0.84 சதவீதமும், ஆட்டோமொபைல் பங்குகள் 0.52 சதவீதமும் உயர்ந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|