மூன்று நாள் சரிவுக்கு பிறகு பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பம்மூன்று நாள் சரிவுக்கு பிறகு பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பம் ... இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு‌டன் ஆரம்பம் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு‌டன் ஆரம்பம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சென்செக்ஸ் 115 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 பிப்
2016
17:28

மும்பை : மூன்று நாட்கள் சரிவுக்கு பின்னர் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன. ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, கச்சா எண்ணெய் விலை சரிவு போன்ற காரணங்களால் கடந்த மூன்று தினங்களாக பங்குச்சந்தைகள் சரிந்தன.
இந்நிலையில் வாரத்தின் நான்காம் நாளான இன்று(பிப்.4ம் தேதி) பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கின. சென்செக்ஸ் 226 புள்ளிகளும், நிப்டி 56 புள்ளிகளும் உயர்வுடனும் துவங்கின. நாள் முழுக்க உயர்வுடனேயே இருந்த பங்குச்சந்தைகள் வர்த்தகம் முடியும்போது உயர்வுடனேயே முடிந்தன.
ஐரோப்பிய மற்றும் ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றத்தாலும், கச்சா எண்ணெய் விலை சற்று மீண்டதாலும், ரூபாயின் மதிப்பு மீண்டும் 68க்குள் கீ்ழ வந்ததாலும் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்க தொடங்கியதால் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் முடிந்ததாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 115.11 புள்ளிகள் உயர்ந்து 24,338.43-ஆகவும், நிப்டி 42.20 புள்ளிகள் உயர்ந்து 7,404-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 18 நிறுவன பங்குகள் உயர்ந்தும், 12 நிறுவன பங்குகள் சரிந்தும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் உலோகம் தொடர்பான பங்குகள் 2.48 சதவீதமும், ஐடி ‌பங்குகள் 0.92 சதவீதமும், நுகர்வோர் தொடர்பான பங்குகள் 0.86 சதவீதமும், கட்டுமானம் மற்றும் எரிசக்தி பங்குகள் 0.84 சதவீதமும், ஆட்டோமொபைல் பங்குகள் 0.52 சதவீதமும் உயர்ந்தன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)