பதிவு செய்த நாள்
06 பிப்2016
15:22
பழநி:பழநி பகுதியில் பச்சைமிளகாய் வரத்து குறைந்துள்ளதால் சந்தையில் ஒருவாரத்தில் கிலோ ரூ.10வரை உயர்ந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் தனியாகவும், ஊடுபயிராகவும் பச்சை மிளகாய் அதிகளவில் சாகுபடியாகிறது.கடந்த சிலநாட்களாக காலையில் பனியும், பகலில் வெயிலின் தாக்கமும் அதிகரித்துள்ளதால் பச்சை மிளகாய் செடிகள் வாடி, விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் சந்தைக்கு நாளுக்குநாள் வரத்துகுறைந்து வருகிறது. எனவே விலை ஒருவாரத்திற்கு கிலோவிற்கு ரூ.10 வரை உயர்ந்துள்ளது.
உழவர்சந்தை அதிகாரி ஒருவர் கூறுகையில், “பழநி உழவர் சந்தைக்கு தினமும் 400 கிலோ வரை பச்சை மிளகாய் வரும். தற்போது சிலநாட்களாக விளைச்சல் குறைவால் 250 முதல் 300 கிலோ தான் வருகிறது. இதன் காரணமாக இருவாரங்களுக்கு முன் ஒரு கிலோ ரூ.22 எனவும்,கடந்தவாரம் ரூ.30ஆகவும் இருந்தது. தற்போது ரூ.36 முதல் ரூ.40 வரை தரத்திற்கு ஏற்றவாறு விலை நிர்ணயம் செய்து விற்கப்படுகிறது. மேலும் விலை உயர வாய்ப்பு உள்ளது,”என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|