பதிவு செய்த நாள்
06 பிப்2016
15:24
புதுடில்லி: அதிகமானோருக்கு வேலை அளிக்கும் நிறுவனங்களுக்கு, வருமான வரி சலுகை உட்பட, பல சலுகைகளை வழங்க, மத்திய அரசு தயாராக உள்ளது.
நாட்டில், வேலைவாய்ப்பை அதிகளவில் உருவாக்க வழிவகை செய்யும் வகையில், அதிகளவில் வேலை அளிக்கும் நிறுவனங்களுக்கு, பல சலுகைகள், மத்திய பட்ஜெட்டில் இடம்பெறும். வரும், 2016 - 17ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, வரும் 29ம் தேதி, நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்யும் போது, இதற்கான அறிவிப்பு வெளியாகும்.
என்னென்ன கிடைக்கும்?* மொத்தம், 2 சதவீதம் கூடுதல் பணியாளர்களை நியமிக்கும் நிறுவனங்களுக்கு, வருமான வரியில், 30 சதவீதம் விலக்கு அளிக்கப்படும்* 'பிராவிடண்ட் பண்ட்' எனப்படும், தொழிலாளர் சேம நல நிதி செலுத்துவதில், அந்த நிறுவனங்களுக்கு, 125 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும்* மிகவும் சுலபமான முறையில், குறைந்த வட்டியில் கடன் வசதி அளிக்கப்படும்.என்பது உட்பட, பல சலுகைகள் அளிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|