பதிவு செய்த நாள்
10 பிப்2016
10:15
மும்பை : பங்குச்சந்தைகளில் சரிவு நிலை தொடர்கிறது. கடந்த இரண்டு நாட்களில் சென்செக்ஸ் சுமார் 595 புள்ளிகள் சரிந்த நிலையில் இன்று(பிப்.10ம் தேதி) மேலும் சரிந்து 24 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சென்றது.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 159.77 புள்ளிகள் சரிந்து 23,861.21-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 41.90 புள்ளிகள் சரிந்து 7,256.30-ஆகவும் இருந்தன.
அந்நிய முதலீடுகள் தொடர்ந்து அதிகளவில் வெளியேறி வருவதாலும், ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்படும் சுணக்கத்தாலும், முதலீட்டாளர்கள் பங்குகளை தொடர்ந்து விற்பனை செய்து வருவதாலும் இன்றைய வர்த்தகம் சரிவுடன் காணப்படுவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய வர்த்தகத்தில் வங்கி, மருத்துவம், உலோகம், எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளிட்ட முக்கிய பங்குகள் சரிவுடன் ஆரம்பமாகின.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|