பதிவு செய்த நாள்
11 பிப்2016
10:44
மும்பை : இந்திய பங்குச்சந்தைகளில் சரிவு தொடர்கிறது. இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு அதிகமாக சரிந்தது, அதோடு நிப்டி 7200 புள்ளிகளுக்கு கீழ் சென்றது.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் காலை (9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 148.20 புள்ளிகள் உயர்ந்து 23,610.70-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 29.50 புள்ளிகள் சரிந்து 7,186.20-ஆகவும் இருந்தது.
ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்படும் சரிவு, குறிப்பாக ஹாங்காங் பங்குச்சந்தை கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 4 சதவீதம் சரிந்தது, முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்து வருவது, அந்நிய முதலீடுகள் வெளியேற்றம் போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் சரிவுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே 10.15 மணியளவில் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு அதிகமாகவும், நிப்டி 70 புள்ளிகளும் சரிந்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|