சிறுசேமிப்பு வட்டி: இனி காலாண்டுக்கு ஒரு முறை மாற்றம்சிறுசேமிப்பு வட்டி: இனி காலாண்டுக்கு ஒரு முறை மாற்றம் ... ரயில் கட்டணம் 10 சதவீதம் உயருகிறது? ரயில் கட்டணம் 10 சதவீதம் உயருகிறது? ...
சிமென்ட் விலை மீண்டும் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 பிப்
2016
16:37

தமிழகத்தில் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் சிமென்ட் விலை, மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு மூடைக்கு, 10 ரூபாய் உயர்த்தப்பட்டு, 420க்கு விற்பனையாகிறது.
தமிழகத்தில் ஆண்டுதோறும், வட கிழக்கு பருவமழை துவக்கத்துக்கு முன், செப்., - அக்., மாதங்களிலும், மத்திய அரசின் பட்ஜெட் தாக்கலுக்கு முன், ஜன., - பிப்., மாதங்களிலும் சிமென்ட் விலையை, உற்பத்தியாளர்கள் உயர்த்துகின்றனர். இந்த வகையில், 2015ல்
செப்டம்பரில், 390க்கு விற்பனை செய்யப்பட்ட, ஒரு மூடை சிமென்ட் விலை, 40 ரூபாய் உயர்த்தப்பட்டு, 430 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால், கட்டுமானப் பணிகள் முடங்கின. அதைஎதிர்த்து, பல அமைப்புகள் போராட்டங்களை அறிவித்தன. இதையடுத்து, சிமென்ட் விலையை, 410 ரூபாயாகக் குறைக்க, உற்பத்தியாளர்கள் முன்வந்தனர். இந்நிலையில், சிமென்ட் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது, பொதுமக்கள், கட்டுமானத் துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்திஉள்ளது.
இது குறித்து, இந்திய கட்டுமான வல்லுனர் சங்கத்தின் தென்னக மைய மூத்த உறுப்பினர் கூறியதாவது:கடந்த ஆண்டு இறுதியில் பெய்த கனமழையால், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போதைக்கு, புதிய கட்டடங்கள் கட்டுவதை விட, மழையால் சேதமடைந்த கட்டடங்களை சீரமைப்பதே அவசியம். எனவே,
நாங்கள், அந்த பணியில் ஈடுபட்டு உள்ளோம். இந்நிலையில், மீண்டும் சிமென்ட் விலை உயர்வை ஏற்க முடியாது. இது, ஆலை நிர்வாகிகளின் மக்கள் விரோத போக்கை வெளிப்படுத்துகிறது. தமிழக அரசு, இந்த விவகாரத்தில் தலையிட்டு, விரைவில் நல்ல தீர்வு கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)