பதிவு செய்த நாள்
12 பிப்2016
10:33
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் நேற்று கடுமையாக சரிந்த நிலையில் இன்றும் அந்த சரிவு தொடர்கிறது. இன்றைய வர்த்தகம் துவங்கும்போது (காலை 9.15மணி) பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கின. மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 164.44 புள்ளிகள் உயர்ந்து 23,116.27-ஆகவும், நிப்டி 50.40 புள்ளிகள் உயர்ந்து 7,026.75-ஆகவும் இருந்தன. ஆனால் சற்று நேரத்திலேயே பங்குச்சந்தைகள் சரிய தொடங்கின.
நிறுவனங்கள் தங்களது மூன்றாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு வருகின்றன. சில நிறுவனங்களின் லாபம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கிறது, சில நிறுவனங்களின் லாபம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இதனால் முதலீட்டாளர்கள் பங்குகளை தொடர்ந்து விற்பனை செய்து வருகின்றன. இதனால் முன்னணி நிறுவன பங்குகளின் விலை சரிந்து வருகிறது. மேலும் ரூபாயின் வீழ்ச்சியும் பங்குச்சந்தைகள் சரிய காரணமாகியுள்ளது.
இதனால் காலை 10.20 மணியளவில் சென்செக்ஸ் 154.40 புள்ளிகள் சரிந்து 22,797.43-ஆகவும், நிப்டி 53.25 புள்ளிகள் சரிந்து 6,923.10-ஆகவும் இருந்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|