ரூபாயின் மதிப்பு ரூ.68.40-ஆக சரிவுரூபாயின் மதிப்பு ரூ.68.40-ஆக சரிவு ... தங்கம் விலையில் அதிரடி - மாலைநிலவரப்படி சவரனுக்கு ரூ.920 அதிகரிப்பு தங்கம் விலையில் அதிரடி - மாலைநிலவரப்படி சவரனுக்கு ரூ.920 அதிகரிப்பு ...
நகைக்கடை அடைப்பு : 500 கோடி தங்கம் விற்பனை பாதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2016
10:49

தங்கம் வாங்கும் போது, 'பான் கார்டு' நகல் பெறும் அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நகை கடைகள், நேற்று மூடப்பட்டதால், 500 கோடி ரூபாய்க்கு வியாபாரம் பாதிக்கப்பட்டது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள, 35 ஆயிரம் நகை கடைகளில், தினமும் சராசரியாக, 1,000 - 1,200 கிலோ தங்க நகைகள் விற்பனையாகின்றன. மத்திய அரசு, தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்த, 'இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல், தங்க நகை வாங்குவோரிடம், பான் கார்டு நகல் பெற வேண்டும்' என, 2015ல் அறிவித்தது. இது, ஜன., மாதம் முதல் அமலுக்கு வந்தது.
தொழிற்கூடங்களும் மூடல்: ஆனால், நகை வாங்குவோர், பான் கார்டு நகல் வழங்கமறுப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், தங்கம் விற்பனை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, பான் கார்டு நகல் பெறும் அறிவிப்பை திரும்பப் பெறக் கோரி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நகை கடைகள், நேற்று முழுவதும் மூடப்பட்டன. இதற்கு ஆதரவு தெரிவித்து, தங்கம், வெள்ளி ஆபரணங்கள் செய்யும் தொழிற்கூடங்களும் செயல்படவில்லை.இதனால், தங்கம் மற்றும் அதன் சார்ந்த தொழில்களில், 500 கோடி ரூபாய் அளவிற்கு வியாபாரம் பாதிக்கப்பட்டது.
இது குறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது: மத்திய அரசின் அறிவிப்பால், தங்க நகை தொழிலில் ஈடுபட்டுள்ள பலர் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல், தங்கம் வாங்கும் போது, பான் கார்டு நகல் பெறுவதை மாற்றி, 10 லட்சம் ரூபாய்க்கு மேல் அமல்படுத்தக் கோரி, நகை கடைகளை மூடினோம். இந்த போராட்டம் முழு அளவில் வெற்றி பெற்றுள்ளது.எங்கள் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு, பட்ஜெட்டில் புதிய அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)