பதிவு செய்த நாள்
12 பிப்2016
15:54
சென்னை : ‘‘நடப்பு மற்றும் சேமிப்பு கணக்கு மூலம் திரட்டிய, ‘டிபாசிட்’ தொகை, 50 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது,’’ என, இந்தியன் வங்கி நிர்வாக இயக்குனரும், முதன்மை செயல் அதிகாரியுமான மகேஷ்குமார் ஜெயின் தெரிவித்தார்.
இது குறித்து ஜெயின் கூறியதாவது: நடப்பு நிதியாண்டில், ஏப்., முதல், டிச., வரையிலான ஒன்பது மாத காலத்தில், நடப்பு மற்றும் சேமிப்பு கணக்கு மூலம் திரட்டிய, டிபாசிட் தொகை, 30 சதவீதம் வளர்ச்சி கண்டு, 51 ஆயிரத்து, 698 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதே காலத்தில், வங்கியின் மொத்த வணிகம், 3.6 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.இதில், வங்கி திரட்டிய டிபாசிட், 1.74 லட்சம் கோடி ரூபாயாகவும், வழங்கிய கடன்கள், 1.26 லட்சம் கோடி ரூபாயாகவும் உள்ளது. கடந்த டிச., மாதத்துடன் முடிந்த காலாண்டில், செயல்பாட்டு லாபம், 760 கோடி ரூபாய்; நிகர லாபம், 42 கோடி ரூபாயாக உள்ளது.
தற்போது, இந்தியன் வங்கிக்கு, 2,532 கிளைகள்; 2,724 ஏ.டி.எம்., என்ற தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரங்கள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|