பதிவு செய்த நாள்
12 பிப்2016
15:55
சென்னை : ‘‘நடப்பு நிதியாண்டின், ஒன்பது மாத காலத்தில், வங்கியின் மொத்த வணிகம், 45 ஆயிரத்து 334 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது,’’ என, சிட்டி யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குனரும், முதன்மை செயல் அதிகாரியுமான காமகோடி தெரிவித்தார்.
இதுகுறித்து, காமகோடி மேலும் கூறியதாவது: பொருளாதார நெருக்கடியால், வங்கி துறை பாதிக்கப்பட்ட நிலையிலும், சிட்டி யூனியன் வங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த, நடப்பு நிதியாண்டின், ஒன்பது மாத காலத்தில், வங்கியின் டிபாசிட், 25 ஆயிரத்து 959 கோடி ரூபாயாகவும், வழங்கிய கடன், 19 ஆயிரத்து 374 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
இதே காலத்தில், வங்கியின் மொத்த வணிகம், 40 ஆயிரத்து 171 கோடி ரூபாயில் இருந்து, 45 ஆயிரத்து 334 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், நிகர வட்டி வருவாய், 253 கோடி ரூபாய்; மொத்த லாபம், 207 கோடி ரூபாய்; நிகர லாபம், 113 கோடி ரூபாயாகவும் அதிகரித்து உள்ளது.
வரும், 22ம் தேதி, கும்பகோணம், மகாமகம் விழாவை முன்னிட்டு, கும்பகோணத்தில் இருந்து, 15 கி.மீ., தொலைவில் உள்ள, சிந்தாமணி என்ற கிராமத்தில் வங்கியின், 500வது கிளை துவங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|