பதிவு செய்த நாள்
12 பிப்2016
17:51
மும்பை : கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்திய பங்குச்சந்தைகள் இந்தவாரம் கடும் சரிவை சந்தித்து இருக்கிறது.
உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சரிவு காரணமாகவும், ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியாலும், அந்நிய முதலீடுகள் அதிகளவில் வெளியேறியதாலும் கடந்த ஒருவார காலத்திற்கு மேலாகவே பங்குச்சந்தைகள் கடுமையாக சரிந்து வந்தன. குறிப்பாக இந்தவாரம் கடுமையாக சரிந்தன.
இந்தவாரத்தில் மட்டும் சென்செக்ஸ் 1,630.85 புள்ளிகளும், நிப்டி 508.15 புள்ளிகளும் சரிந்தது. இது கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத சரிவு என சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2009ம் ஆண்டுக்கு பிறகு ஒருவாரத்தில் அதிக சரிவை சந்தித்தது இந்த வாரம் தான்.
இதனிடையே இந்திய பங்குச்சந்தைகள் இன்று(பிப்.12ம் தேதி) சிறிய ஏற்றத்துடன் முடிந்தன. முன்னதாக வர்த்தகம் துவங்கும் போது உயர்வுடன் ஆரம்பமாகின. ஆனால் முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததால் பங்குச்சந்தைகள் சரிந்தன. இருப்பினும் வர்த்தகம் முடியும் போது சிறிய ஏற்றத்துடன் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 34.29 புள்ளிகள் உயர்ந்து 22,986.12-ஆகவும், நிப்டி 4.60 புள்ளிகள் உயர்ந்து 6,980.95-ஆகவும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 15 நிறுவன பங்குகள் உயர்ந்தும், 15 நிறுவன பங்குகள் சரிந்தும் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|