பதிவு செய்த நாள்
20 பிப்2016
03:54
புதுடில்லி:கடந்த, 2015ம் ஆண்டின், முதல் அரையாண்டில், வீடுகள் விற்பனை, 17 சதவீதம் குறைந்துள்ளதாக, சி.பி.ஆர்.இ., என்ற கட்டுமான ஆய்வு நிறுவனம் தெரிவித்து உள்ளது. அதிக விலை மற்றும் விலை குறையும்போது வாங்கலாம் என்ற வாடிக்கையாளரின் காத்திருப்பு போன்ற காரணங்களால், வீடுகள் விற்பனை குறைந்து வருகிறது.
இருப்பினும், ஐதராபாத், மும்பை நகரங்களில் மட்டும், ஓரளவிற்கு வீடு விற்பனை நன்கு உள்ளது. சொகுசு வீடுகள் விற்பனையை பொறுத்த வரையில், டில்லி, பெங்களூரில் பாதிப்பு இல்லை.
இதுகுறித்து, சி.பி.ஆர்.இ., ஆய்வு நிறுவன தலைவர் அன்சுமன் கூறுகையில், ‘கடந்து ஆண்டு இறுதியில், வீடுகள் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது. ரிசர்வ் வங்கி, வட்டி விகிதங்களை குறைத்து வருவதால், 2016ல், வீடுகள் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்’ என்றார்.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|