பதிவு செய்த நாள்
21 பிப்2016
06:19
மும்பை : ரிலையன்ஸ் குழும நிறுவனங்களின் பாதுகாப்பு பணிக்கு, முப்படைகளில் பணிபுரிந்த வீரர்கள் நியமிக்கப்பட்ட இருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.
முகேஷ் அம்பாணியின் ரிலையன்ஸ் குழும நிறுவனங்களின் பாதுகாப்பு பணிகளுக்கு, விமான படை, ராணுவம், கப்பல் படைகளில் பணிபுரிந்த, முன்னாள் வீரர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதில், கார்கில் போர், ஆமதா பாத் நகரில் உள்ள அக் ஷர்தர் கோவில், மும்பையில், 2011 நவ., 26ல் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலின் போது பணிபுரிந்த வீரர்களும் அடங்குவர்.
இதுகுறித்து, ரிலையன்ஸ் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:உள்நாட்டில், பாதுகாப்பு அச்சுறுத்தல் பெருகி வருகிறது. உலகில் உள்ள பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில், குஜராத்தில் உள்ள, ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆலையும் ஒன்று. இங்கு, பாதுகாப்பு பணிக்கு, மத்திய அரசின், 200 தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளனர். ஆனால், அதுபோல், பல மடங்கு கூடுதல் வீரர்கள் தேவை. இதனால், முப்படையில் பணிபுரிந்த முன்னாள் வீரர்கள், ரிலையன்ஸ் குழு நிறுவனங்களின் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட உள்ளனர். பாதுகாப்பு வீரர்களுக்கு பயிற்சி வழங்க, மும்பையில் இருந்து, 110 கி.மீ., துாரம் உள்ள நகோதானே என்ற இடத்தில், பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பயிற்சி பெற்றவர்கள் தான், ஐ.பி.எல்., கிரிக்கெட், ரிலையன்ஸ் அறக்கட்டளை, ஆண்டு பொது குழு கூட்டங்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|