பதிவு செய்த நாள்
17 மார்2016
13:37
புதுடில்லி : இந்த ஆண்டு இறுதிக்குள் 65 லட்சம் டன் பருப்பு இறக்குமதி செய்யப்பட உள்ளதாகவும், எந்த சூழ்நிலையிலும் பருப்பு விலைகளின் உயர அரசு அனுமதிக்காது எனவும் மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
லோக்சபாவில் பேசிய ராம்விலாஸ் பாஸ்வான், 2015ம் ஆண்டு தேவைக்கு ஏற்றவாறு பருப்பு உற்பத்தி செய்யப்படவில்லை. சுமார் 170 லட்சம் டன் பருப்பு மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. அவற்றில் 45 லட்சம் டன் ஏற்றுமதி செய்யப்பட்டு விட்டது. இதனால் பருப்பு வகைகளின் தேவை 215 லட்சம் டன்களாக அதிகரித்தது. இதனால் பருப்பு தேவையை சமாளிக்க இந்த ஆண்டு 65 லட்சம் டன் பருப்பு இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
தனியாரிடம் இருந்து மார்ச் 1ம் தேதி வரை 55.5 லட்சம் டன் பருப்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. 2015-16 வேளாண் உற்பத்தி ஆண்டில் பருப்பு உற்பத்தி 17.33 மில்லியன் டன்னாக உள்ளது என கணக்கிடப்பட்டுள்ளது. பருப்பு விலையை உயர்வை எந்த சூழலிலும் அனுமதிக்க முடியாது. ஒருவேளை உயர்ந்தால், அதனை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பருப்பு பதுக்கல் எங்கும் நடைபெறாமல் இருக்க மாநில அரசுகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ரூ.220 வரை உயர்ந்திருந்த ஒரு கிலோ பருப்பின் விலை, தற்போது அரசின் தொடர் நடவடிக்கையால் ரூ.150 முதல் 160 என்ற அளவுக்கு குறைந்துள்ளது என்றார்.
பருப்பை தவிர அரிசி, சர்க்கரை என வேறு எந்த உணவுப் பொருட்களின் விலையும் உயரவில்லை. தக்காளி, வெங்காயம் விலை மட்டுமே உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு தற்காலிகமானது தான் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|