பதிவு செய்த நாள்
22 மார்2016
08:12
மும்பை : கோத்ரெஜ் பிராப்பர்டீஸ் நிறுவனம், ரியல் எஸ்டேட் துறைகளில் முதலீடு செய்ய, தனி நிதியத்தை துவக்கி உள்ளது.பிரபல கோத்ரெஜ் குழுமத்தை சேர்ந்த கோத்ரெஜ் பிராப்பர்டீஸ் நிறுவனம், ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், கோத்ரெஜ் பண்ட் மேனேஜ்மென்ட் என்ற நிதியத்தை துவக்கி உள்ளது. இந்த நிதியம், 1,900 கோடி ரூபாய் நிதி திரட்டி உள்ளது. இதில், டச்சு நாட்டின் ஏ.பி.ஜி., என்ற பென்ஷன் பண்டு நிறுவனம், அதிகளவில் முதலீடு செய்துள்ளது. கோத்ரெஜ் பண்ட் மேனஜ்மென்ட் நிதியத்தின் தலைமை அதிகாரியாக, கரன் போலாரியா நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த நிதியம், இந்தியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.நீண்ட கால பங்கு முதலீட்டாளர்களை இந்த ரியல் எஸ்டேட் பண்டு நிச்சயமாக ஈர்க்கும் என்று நம்புகிறது கோத்ரெஜ் பிராப்பர்டீஸ் நிறுவனம்.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|