பதிவு செய்த நாள்
22 மார்2016
08:16
புதுடில்லி : ஆப்பிள் நிறுவனத்தின், புதிய ஐபோன், புதிய ஐபேடு ஆகியவை அறிமுகம் செய்யப்பட உள்ளன. சந்தையை தக்க வைத்துக்கொள்ள அதிரடியாக தொடர்ந்து புதிய மாடல்களை இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் என்கிறார்கள்.தொலைதொடர்பு சாதனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில், ஆப்பிள் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு உலகம் முழுவதும் அதிக வரவேற்பு உள்ளது. இந்நிறுவனம், தன் புதிய ஐபோன் மற்றும் ஐபேடு ஆகியவற்றை அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோவில் உள்ள சிலிகான் வேலியில், இன்று, அறிமுகம் செய்ய உள்ளது.இந்த புதிய ஐ போனில், சிறிய ஸ்கிரீன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், ஏற்கனவே உள்ள, 5 எஸ், 5 ஐபோன்களுக்கு மாற்றாக இருக்கும் என தெரிகிறது. புதிதாக அறிமுகம் செய்ய உள்ளது, ஐபோன் எஸ்.இ., அல்லது, 5 எஸ்.இ., என பெயரிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த போன், ஆண்டுக்கு, ஒரு கோடி முதல், 1.50 கோடி வரை விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம், விரைவில், ஐபோன் 7 எனும் புதிய மாடலையும் அறிமும் செய்ய உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|