பதிவு செய்த நாள்
26 மார்2016
05:10
ஆமதாபாத்: வலைதளம் வாயிலாக, பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வரும் நிறுவனமான, இன்பிபீம் இன்கார்ப்பரேஷன் நிறுவனம், அண்மையில் பங்கு வெளியீட்டின் மூலம், 450 கோடி ரூபாய் திரட்ட முன்வந்தது. இதன் பங்கு வெளியீடு, கடந்த 21ம் தேதி துவங்கி, 23ம் தேதியன்று முடிவடைந்தது. ஒரு பங்கின் விலை, 360 ரூபாய் முதல் 432 ரூபாய் வரை என, நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.மொத்தம், 1.25 கோடி பங்குகளை, இந்த நிறுவனம் வெளியிடுகிறது. 1.37 கோடி பங்குகளுக்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன. இந்நிறுவனத்தின் பங்குகளுக்கு, 1.1 மடங்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
நிறுவன முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளில், 86 சதவீதம் மட்டுமே பரிந்துரையானது. நிறுவன முதலீட்டாளர் அல்லாதவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த பங்குகளில், 2.23 மடங்கு பரிந்துரையானது. சிறு முதலீட்டாளர்களுக்கு என ஒதுக்கப்பட்டதில், 1.25 மடங்கு பரிந்துரையானது. குஜராத் தலைநகர் ஆமதாபாத்தை தலைமை இடமாக கொண்டு, இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது,
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|