பதிவு செய்த நாள்
20 ஏப்2016
23:22
சென்னை : மகாராஜா ஒயிட்லைன் பிராண்டில் மேலும் 9 புதிய ஏர்கூலர்களை அறிமுகம் செய்திருக்கிறது, குரூப் எஸ்இபி நிறுவனம். குரூப் எஸ்இபி நிறுவனம், மிக்ஸி, ஜூஸர் மேக்கர், ஏர்கூலர், ரூம் ஹீட்டர் போன்ற வீட்டு தேவைகளுக்கான பல்வேறு சாதனங்களை தயாரித்து வழங்கிவருகிறது. இந்த கோடை காலத்தை முன்னிட்டு இந்நிறுவனம் டெசர்ட் பிரிவில் 3, பெர்சனல் பிரிவில் 6 என, மொத்தம் 9 புதிய ஏர்கூலர்களை அறிமுகம் செய்திருக்கிறது.
இதுகுறித்து இந்நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது: ஏர்கூலர் பிரிவில், எங்களது மிக நீண்ட அனுபவத்தின் அடிப்படையில், இந்த புதிய ஏர்கூலர்களை நாங்கள் அறிமுகம் செய்திருக்கிறோம். ஐரோப்பிய தரத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த ஏர்கூலர்கள், காற்றை வேகமாக வீசுவதிலும் விரைவாக குளிர்விக்கவல்லதுமாக இருக்கும். இந்திய தட்பவெப்ப நிலைக்கு ஈடுகொடுப்பதாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|