பதிவு செய்த நாள்
27 ஏப்2016
23:54
புதுடில்லி : கார்பன் மொபைல்ஸ் நிறுவனம், தன் மொபைல் போனில், பெண்கள் பாதுகாப்பிற்காக, தனி ஆப் சேவையை வழங்க உள்ளது. மத்திய அரசு, ‘மொபைல் போன் தயாரிப்பில் ஈடுபட்டு உள்ள நிறுவனங்கள், 2017க்குள், ஆபத்து காலங்களில் அழைக்கும் வகையில், பேனிக் பட்டனை மொபைல் போனில் ஏற்படுத்த வேண்டும்’ என, உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், கார்பன் நிறுவனம், பெண்கள் பாதுகாப்பிற்காக, மொபைல் போனில், எஸ்.ஓ.எஸ்., என்ற, ‘ஆப்’ வசதியை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது. இதன் மூலம், அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், சேவை வழங்கப்படும்.இதுகுறித்து, கார்பன் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மொபைல் போனில், பல சேவைகள் வழங்கி வருகிறோம். அந்த வகையில், பெண்கள் பாதுகாப்புக்கான இந்த எஸ்.ஓ.எஸ்., ஆப்பை உருவாக்கி இருக்கிறோம். இன்னும் இரண்டு மாதங்களில் அறிமுகப்படுத்த இருக்கிறோம்’ என்றார்.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|