பதிவு செய்த நாள்
30 ஏப்2016
06:28
புதுடில்லி : மக்களுக்கு, ‘ஆதார்’ அடையாள எண் போல், நிறுவனங்களுக்கும் தனி அடையாள எண் வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. தற்போது, கார்ப்பரேட் நிறுவனங்களின் தொழில் உரிமத்திற்கு, தனி எண் வழங்கப்படுகிறது. இந்நிறுவனங்கள், வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாவுக்கும், தனித் தனி எண்கள் உள்ளன. இதனால், ஒரு நிறுவனம், அந்தந்த துறைகளுக்கு உரிய எண்களை குறிப்பிட்டு, ஆவணங்களை தாக்கல் செய்யும் நிலை உள்ளது. இதை தவிர்த்து, ஒரே பொதுவான அடையாள எண்ணை நிறுவனங்களுக்கு வழங்குவது குறித்து, மத்திய நேரடி வரிகள் வாரியமும், மத்திய நிறுவனங்கள் விவகாரத் துறையும் இணைந்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன. இத்திட்டம் அமலானால், ஒரு நிறுவனத்தின் ஜாதகம் முழுவதையும், பிற துறைகள் அறிய வாய்ப்பு கிட்டும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|