பதிவு செய்த நாள்
30 ஏப்2016
06:29
புதுடில்லி : ‘‘இந்தியாவில், 50 சதவீதத்திற்கும் அதிகமான சிறிய நிறுவனங்கள், வரி செலுத்துவதில்லை; அவற்றில் வரி ஏய்ப்பு நடைபெறுகிறதா என்பதை, மத்திய அரசு கண்காணித்து வருகிறது,’’ என, மத்திய நிதி துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா லோக்சபாவில் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: வரி ஏய்ப்பை தடுக்கவும், வரி வசூலை அதிகரிக்கவும், மத்திய அரசு, புரட்சிகரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் விளைவாக, வரி ஏய்ப்பை தடுப்பதில், சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள சிறிய நிறுவனங்களில், 50 சதவீத நிறுவனங்கள், அரசுக்கு வரி செலுத்துவதில்லை. அவை, மத்திய அரசின் கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன. அந்நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்வது கண்டுபிடிக்கப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|