பதிவு செய்த நாள்
30 ஏப்2016
06:30
புதுடில்லி : ‘இந்திய பொருளாதாரம் சோதனையிலும் சாதனை படைத்து வருவது ஆச்சரியமளிக்கிறது’ என, ஜப்பானைச் சேர்ந்த, நிதி சேவைகள் நிறுவனமான, நொமுரா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை விவரம்:சர்வதேச பொருளாதார மந்தநிலை, தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக தவறிய பருவமழை, தனியார் துறை முதலீடுகளில் ஏற்பட்டுள்ள தொய்வு உள்ளிட்ட பல காரணிகளால், இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலும், முக்கிய துறைகள் எழுச்சி கண்டு வருவது, மிகுந்த ஆச்சரியத்தை அளித்துள்ளது. இந்த எழுச்சிக்கு சிறப்பு சேர்க்கும் வகையில், இந்தாண்டு பருவமழை நன்கு இருக்கும் என்ற வானிலை முன்னறிவிப்பு வந்துள்ளது. இத்துடன், ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையை அமல்படுத்துவதால், பணப்புழக்கம் அதிகரித்து, மக்களின் செலவழிப்பு அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், இந்தாண்டு, இந்தியாவின் பல்வேறு துறைகளும் சிறப்பான வளர்ச்சி காணும். முக்கிய எட்டு துறைகள், இந்தாண்டு, சரிவில் இருந்து மீண்டுள்ளன. மத்திய அரசின் கொள்கைகள், அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் உள்ளிட்டவற்றால், சகல துறைகளும் எழுச்சி காணத் துவங்கியுள்ளன. இந்த வளர்ச்சியால் உந்தப்படும் தனியார் நிறுவனங்கள், வரும், 2017 – 18ம் நிதியாண்டில், புதிய திட்டங்களில் ஆர்வத்துடன் முதலீடு மேற்கொள்ளும் என, தெரிகிறது. இந்தாண்டு, இந்திய சந்தைகளில் மேற்கொள்ளும் முதலீடுகள் மீதான வருவாய், 15 – 25 சதவீதமாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|